போதைப்பொருள் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புக்கள் நாளாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய 6 மாதங்களில் 366 கிலோ கிராம் ஹெரோயின், 4796 கிலோ கிராம் கஞ்சா, 791 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பவற்றுடன், இவற்றால் பெற்றுக் கொள்ளப்பட்ட 318 மில்லியன் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.