உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

51வயதில் ஒரே! பிரவசத்தில் நான்கு பிள்ளைகள்

தனது 51 ஆம் வயதில் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த பிரித்தானிய தாயார் தமது அன்றாட வாழ்க்கை குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
வடக்கு லண்டனில் குடும்பத்துடன் குடியிருக்கும் 51 வயது ட்ரேசி பிரிட்டென் என்பவரே தற்போது ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.

ஏற்கெனவே 3 பிள்ளைகளுக்கு தாயாரான ட்ரேசிக்கு 8 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

தமது 39-வது வயதில் 19 வார கர்ப்பம் தவறிய பின்னர் தற்போது செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிள்ளை பெற்றுள்ளார்.

இதற்கென 7000 பவுண்டுகள் செலவிட்டதாக கூறும் ட்ரேசி, தமது பிள்ளைகளுக்காக வாரம் 224 போத்தல் ஃபார்முலா பால் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வாரம் 28 முறை குளிப்பாட்டுவதாகவும் 56 தடவை உடை உடுத்தி விடுவதாகவும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போதெல்லாம் தாம் வெறும் 3 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும், ஆனால் இது சில காலம் மட்டுமே என்பதால் அதுபற்றி கவலைப்படுவதில்லை எனவும் ட்ரேசி தெரிவித்துள்ளார்.

தாய்மையை தற்போது தாம் ரசிப்பதாகவும் முழு நேர தாயாராகவே மாறியுள்ளதாகவும் ட்ரேசி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரசியல் என்பதை எனது பார்வையில், ஒரு புனிதப் பணியாகவே கருதுகின்றேன் அமைச்சர் றிஷாட்

wpengine

அரச கரும மொழி தேர்ச்சி! அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கேற்ப தேர்தல் பிற்போடப்படப்படுகிறதா – டிலான்

wpengine