பிரதான செய்திகள்

5,000 ரூபா கொடுப்பனவு வழங்க முடியும் என்று தான் நினைக்கவில்லை இராஜாங்க அமைச்சர் தயாசிறி

நாடு முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க முடியும் என்று தான் நினைக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எனினும், 2,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படலாம் என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் நாடு மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இந்த முறை பேரிடரிலிருந்து மீள முடியாத சூழ்நிலையில் இருந்ததால் இம்முறை முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறிலங்கா சுதந்திக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் சம்பளத்தையும் கொரோனா நிதிக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

Related posts

முசலி பிரதேச வாழ்வாதாரத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி! ஊழல் லஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு (விடியோ)

wpengine

அரசுக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கானோர்: ஈராக் பாராளுமன்றம் சூறை

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைதுசெய்ய நடவடிக்கை!

Editor