பிரதான செய்திகள்

5ம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது “மிகவும் கடினம்” என்று தேர்தல் ஆணைக்குழு

நாட்டில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்த நிலையில், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை அரசாங்கம் சட்டப்பூர்வமாக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாது போனால் எதிர்வரும் 5ம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது “மிகவும் கடினம்” என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


“சுகாதார வழிகாட்டுதல்களுக்கு சட்டப்பூர்வ அங்கிகாரம் வழங்கப்படாவிட்டால் தேர்தலை நடத்துவது மிகவும் கடினம்” என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.


இந்நிலையில், பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் வகையில், அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் போது சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


இதனிடையே, நேற்று செய்தியாளர் சந்திப்பில் பெஃப்ரல் அமைப்பினர் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களை தாமதமின்றி வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


மேலும், தேர்தல் ஆணைய உறுப்பினர்களைச் சந்தித்த பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னாரில் மழை! பல விவசாயிகள் பாதிப்பு! நடவடிக்கை எடுக்காத அரச அதிகாரிகள்

wpengine

மல்லவபிட்டிய பள்ளிவாசல் தாக்குதல்! பொதுபல சேனாவின் உறுப்பினர் விடுதலை

wpengine

கோத்தபாய ராஜபக்சவுக்கும் ரவூப் ஹக்கீமுக்கிடையில் அண்மையில் தொலைபேசி உரையாடல்

wpengine