பிரதான செய்திகள்

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கையில்

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று(14) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்திய கடன் வசதியின் கீழ், டீசல் கொண்டுவரப்படவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் மீண்டும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். பெர்னாண்டோ தெரிவித்தார்.

Related posts

வில்பத்து பிரச்சினை! ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும்

wpengine

ரோஹிங்கிய முஸ்லிம்களை பூஸா சிறையில் அடைத்த நல்லாட்சி

wpengine

ரஞ்ஜன் ராமநாயக்க ஒரு பைத்தியக்காரரா?

wpengine