பிரதான செய்திகள்

3வருடங்களின் பின் பிணையில் விடுதலையான சஹ்ரானின் மைத்துனர் மீண்டும் கைது!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சஹரன் ஹசிமின் மைத்துனர் குளியாப்பிட்டிய கட்டுபொத்த பிரதேசத்தில் இருந்து கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது கொச்சிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனுடன் அவரது மனைவியும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக கருதப்படும் சஹாரான் ஹாசிமின் மனைவி பாத்திமாவின் சகோதரர் ஆவார்.

சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 2019 ஆம் ஆண்டு முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டு 2022 செப்டெம்பர் 23 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய ரீதியான போட்டியில் முசலி-ஜின்னா (அகத்திமுரிப்பு) 2ஆம் இடம் (படங்கள்)

wpengine

முசலி பிரதேச செயலாளரின் நடவடிக்கை காரணமாக மன்னார் மட்டத்தில் சிறந்த அடைவு! அதிபர் பாராட்டு

wpengine

மக்களின் நலன் கொண்டதாகவே அபிவிருத்திகள் இடம்பெற வேண்டும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

wpengine