செய்திகள்பிரதான செய்திகள்

32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனகங்கார பொலிஸ் பிரிவில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, நேற்று (08) கஞ்சா பயிரிடப்பட்ட தோட்டங்களிலிருந்து 32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவில பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள்

மேலும், அதே பகுதியில் 04 ஏக்கர் நிலப்பரப்பில் 02 கஞ்சா தோட்டங்களில் பயிரிடப்பட்ட 116,230 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோனகங்கார பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்ப்படுமெனில் ஐந்து வருடத்திற்குள் சிங்கப்பூரைப் போன்று வளர்ச்சி அடைய முடியும்

wpengine

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை (20) அரச விடுமுறை

wpengine

அமைச்சு பதவி் தொடர்பில்! யாரு தலையீட வேண்டாம் -முத்து சிவலிங்கம்

wpengine