பிரதான செய்திகள்

3 ஆயிரத்து 626 பேருக்கு ஆசிரியர் நியமனம்

இலங்கையில் 19 கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிய டிப்ளோமாதாரிகள் 3 ஆயிரத்து 626 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அலரிமாளிகையில் நேற்று  இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது ஆயிரத்து 78 தமிழ் ஆசிரியர்களுக்கான நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

சீனர்கள் நாளை மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்! எச்சரிக்கை

wpengine

மஹ்ரூப் கடமைகளை அமைச்சில் பொறுப்பேற்றுக்கொண்டார்! றிஷாட் பங்கேற்பு

wpengine

ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக ஐ.நா.முகவர்களை சந்தித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

wpengine