பிரதான செய்திகள்

23 ஆம் திகதி காலை 10 மணி வரை பாராளுமன்றம்

பாராளுமன்றம் பல்வேறு சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் சற்று முன்னர் நான்காவது முறையாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. 

(பின்னிணைப்பு – 1.05 PM) பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதன் பின்னர் 23 ஆம் திகதி காலை 10 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்றம் இன்று கூடியதன் பின்னர் மீண்டும் ஒத்தி வைப்பதற்கு கட்சித் தலைவர்கள் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பாராளுமன்ற அமர்வை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு இன்று அனுமதி வழங்கப்படாத நிலையில் அமர்வில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

4 அரசியல் கட்சிளுக்கு தேர்தல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு!

Editor

புத்தள மாவட்ட ஆசிரியர்கள் நியமனம்! மேசை மீது ஏறி போராட்டம் நடாத்திய நியாஸ்

wpengine

12 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம்! பின்னர் எரிபொருள் விலை அதிகரிப்பு

wpengine