வடமராட்சி பொலிகண்டி மேற்கு கடற்கரையில் இன்று (15) அதிகாலை 220 கி.கி கேரளா கஞ்சாவுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதி ஊடாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து இராணுவ புலனாய்வுப் பிரிவினர் சோதனை நடவடிக்கைகள் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது படகு ஒன்றில் இருந்து 220 கிலோகிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளகப்பட்டுள்ளதுடன் சந்தேநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் மீட்க்கப்பட்ட கஞ்சாவும் படகும் வல்வெட்டித்துறை பொலிஸில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.