பிரதான செய்திகள்

207 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக தகவல்

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 207 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 207 பேரில் 40 பேர் வெளிநாட்டவர்கள் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் உயிரிழந்த வெளிநாட்டவர்களில் 9 பேர் உறுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய உயிரிழந்தவர்கள், அமெரிக்கா, பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் போர்த்துகல் நாட்டவர்கள் என உறுதியாகியுள்ளது.

அத்துடன் டச்சு நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டச்சு வெளிவிவகார அமைச்சர் Stef Blok உறுதி செய்துள்ளார்.

அவர்களுடன் போர்த்துகள் மற்றும் சீன நாட்டவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

அஷ்ரப் பெற்றுக்கொடுத்த காணிக்கு உறுதிப்பத்திரம் வழங்க அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

21 வீராங்கனைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நிதி வழங்கி வைப்பு

wpengine

அறிவியல் வினாத்தாள் – சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் போலியானவை.!

Maash