பிரதான செய்திகள்

2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இறுதி நிலை அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க தீர்மானம்!

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதி நிலை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி, தேசிய ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவப் பொறுப்புச் சட்டத்தின் பிரிவு 13 இன் விதிகளின்படி, நிதிப் பொறுப்புள்ள அமைச்சர், சம்பந்தப்பட்ட நிதியாண்டுக்கு அப்பால் ஐந்து மாதங்கள் கடக்கும் முன், பட்ஜெட் குறித்த இறுதி நிலை அறிக்கையை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி நிலை அறிக்கை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

தேர்தலில் போட்டியிட விரும்பாத போதும் காலத்தின் தேவை

wpengine

மர்ம நோயால் வயோதிப தோற்றம்கொண்ட சிறுவன்

wpengine

தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கு இலங்கை அடித்தளம் செயலமர்வில் அமைச்சர் றிஷாட்

wpengine