செய்திகள்பிரதான செய்திகள்

2024 உயர்தர பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம் .

2024 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, உயிரியல் பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலய மாணவி ஹேகொட ஆராச்சிகே சந்திதி நிம்ஹார நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

கணிதப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலித்தை கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவன் லெந்து ரணசிங்க குமாரகே பெற்றுள்ளார்.

கொழும்பு விசாகா கல்லூாியின் மாணவி கங்கானிகே அமாஷா துலாரி பெரேரா, வணிகப் பிரிவில் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அதேநேரம் ரத்னாவலி பாலிகா வித்யாலய மாணவி செனெலி சமத்கா ரணசிங்க, கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

Related posts

இந்த ரமலானில் 2 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு, 50 தொன் பேரீச்சம்பழங்கள் விநியோகம்.

Maash

கலா ஓயா ஆற்றில் குளிப்பதற்காக சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு .

Maash

சிறுபான்மையினரின் மதஸ்தளங்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்படுவதில் பாரபட்சம் அன்வர் தெரிவிப்பு

wpengine