உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

2 மத்திய அமைச்சர்கள் திடீர் ராஜினாமா! பெண் முஸ்லிம்

மத்திய அமைச்சர்கள் நஜ்மா ஹெப்துல்லா, ஜி.எம்.சித்தேஸ்வரா ஆகியோர் தங்களது பதவிகளை திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்தவர் நஜ்மா ஹெப்துல்லா. அதேபோல், மத்திய கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ஜி.எம்.சித்தேஸ்வரா.

இந்நிலையில், அமைச்சர்கள் நஜ்மா ஹெப்துல்லா மற்றும் ஜி.எம்.சித்தேஸ்வரா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதற்கான கடிதத்தை, ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியிடம் அவர்கள் வழங்கினர். அவர், இவர்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, இணை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்விக்கு சிறுபான்மையினர் நலத்துறை தனிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சராக பாபுல் சுப்ரியோல் நியமிக்கப்பட்டுள்ளார்.

வயது முதிர்வு மற்றும் தங்களது துறை சார்ந்த பணிகளில் தொய்வு போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் நஜ்மா ஹெப்துல்லா, ஜி.எம்.சித்தேஸ்வரா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் .

wpengine

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு! முதியோர்கள் பாதிப்பு

wpengine

கட்டார் நாட்டின் முன்னால் மன்னர் மரணம்! அனுதாபம் தெரிவித்த அமைச்சர் றிஷாட்

wpengine