பிரதான செய்திகள்

17ஆம் திகதி பாடசாலை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நான்கு பாடசாலைகள் இம்மாதம் எட்டாம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகள் கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காகவே மூடப்படுகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு இசிபத்தான, மாத்தறை மஹானாம, குருநாகல் சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர மற்றும் கண்டி புனித மரியாள் கல்லூரி போன்ற பாடசாலைகளே இந்த பட்டியலில் அடங்குகின்றன.

மேலும், 22 பாடசாலைகளில் குறித்த பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதில் சில பாடசாலைகள் மூடப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

அந்தமான் தீவுப்பகுதியில் புயல்! இலங்கையினை தாக்குமா

wpengine

மக்களுக்காக அனைத்து சட்டங்களையும் மாற்றுங்கள் ஜனாதிபதி

wpengine

பொலிஸ் நிலையத்தின் அறிவிப்பு , எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்.

Maash