பிரதான செய்திகள்

17ஆம் திகதி பாடசாலை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நான்கு பாடசாலைகள் இம்மாதம் எட்டாம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகள் கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காகவே மூடப்படுகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு இசிபத்தான, மாத்தறை மஹானாம, குருநாகல் சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர மற்றும் கண்டி புனித மரியாள் கல்லூரி போன்ற பாடசாலைகளே இந்த பட்டியலில் அடங்குகின்றன.

மேலும், 22 பாடசாலைகளில் குறித்த பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதில் சில பாடசாலைகள் மூடப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

அல்லாஹ்வையும்,பெருமானாரையும் நிந்தித்து வரும் ஞானசார தேரர்! றிசாட் ஆவேசம்

wpengine

ACMC திருகோணமலை மாவட்ட மத்திய குழுக்கூட்டமும், எதிர்வரும் தேர்தல் தொடர்பான கலந்துரையாடலும்.

Maash

சிறுபான்மை நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதியை பெற்றுக்கொள்ள முடியும்

wpengine