பிரதான செய்திகள்

17ஆம் திகதி பாடசாலை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நான்கு பாடசாலைகள் இம்மாதம் எட்டாம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகள் கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காகவே மூடப்படுகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு இசிபத்தான, மாத்தறை மஹானாம, குருநாகல் சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர மற்றும் கண்டி புனித மரியாள் கல்லூரி போன்ற பாடசாலைகளே இந்த பட்டியலில் அடங்குகின்றன.

மேலும், 22 பாடசாலைகளில் குறித்த பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதில் சில பாடசாலைகள் மூடப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

ரிஷாட் பதியுதீனின் விடயத்தில் அரசு நீதியாக நடந்துகொள்ள வேண்டும்

wpengine

புத்தள அரசியல்வாதிகளே! றமழான் மாதத்தில் தொடடும் மின் வெட்டு பின்னனி என்ன?

wpengine

இவ் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 137 பஸ் விபத்துக்கள் – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்!

Editor