பிரதான செய்திகள்

17ஆம் திகதி பாடசாலை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நான்கு பாடசாலைகள் இம்மாதம் எட்டாம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகள் கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காகவே மூடப்படுகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு இசிபத்தான, மாத்தறை மஹானாம, குருநாகல் சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர மற்றும் கண்டி புனித மரியாள் கல்லூரி போன்ற பாடசாலைகளே இந்த பட்டியலில் அடங்குகின்றன.

மேலும், 22 பாடசாலைகளில் குறித்த பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதில் சில பாடசாலைகள் மூடப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

குருணாகல் மாநகர சபை அஷார்தீன் மொய்னுதீன் நிதி ஒதுக்கீட்டில் பாதை நிர்மாணம்

wpengine

த‌மிழ‌ர், முஸ்லிம்க‌ளில் 98 வீத‌ம் கோட்டாவுக்கு ஓட்டு போட‌த‌வ‌ர்க‌ளே!

wpengine

பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்??????

Maash