பிரதான செய்திகள்

15 அத்தியாவசியப் பொருட்களின் நிவாரண விலைகள் இன்று

சீனி, உருளைக்கிழங்கு, பருப்பு, பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய், கருவாடு
மற்றும் பால்மா உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருட்களுக்கான நிவாரண விலைகள்
இன்று அறிவிக்கப்படவுள்ளன.


வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு, நேற்று ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது.

இதன்போது இந்த விடயம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. வெட் வரி அதிகரிப்பினால் விலை அதிகரிப்பு ஏற்பட்டிருந்த குறித்த பொருட்களை நிவாரண விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி புதிய விலைகள் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இளம் மனைவிக்கு கணவன் செய்த கேவலம்! 23ஆம் திகதி விளக்கறியல்

wpengine

மொதிரிகிரிய நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

wpengine

ஆடையை எரித்த நட்சத்திரம் – பின்னணி மதத்தலைவர்களா?

wpengine