பிரதான செய்திகள்

15ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்கவும்!

2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், குறித்த தினத்திற்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி மே 31றுடன் நிறைவடைந்தது.

எனினும், நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இந்த காலஎல்லை ஜூன் 15 வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னாரில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் கைது!

Editor

முசலி பிரதேச செயலகத்தில் தஞ்சமடைந்த சமுர்த்தி பயனாளிகள்! பலர் கவலை

wpengine

அமெரிக்கா ,பிரித்தானியாவின் நடவடிக்கை சட்டத்திற்கு விரோதமானது.

wpengine