பிரதான செய்திகள்

15வயது பௌத்த பிக்கு பாலியல் பலாத்காரம்! ஒருவர் கைது

தலாத்து ஓயாப் பொலீஸ் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதால் காயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி வைத்தியசாலையில் 32ம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள 15 வயதுடைய மேற்படி மாணவ பிக்கு மீது பாலியல் துன்புருத்தல் புரிந்ததாக அதே விகாரையைச் சேர்ந்த 33 வயதுடைய மற்றுமொரு பிக்குவை தலாத்துஓயா பொலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் இடம் பெறுகின்றன.

தலாத்து ஓயா ஸ்ரீ பிரியதர்ஷனாராம என்ற விகாரையிலே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

Related posts

கட்டாய எரிப்பு ஒழுங்குவிதி சட்டத்திற்குட்பட்டதா?- பகுதி-3

wpengine

“மார்ச் 05 முதல் மின்வெட்டு இல்லை!“தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை

wpengine

வேகமான மழலைக்கான வித்தியாசமான போட்டி! (வீடியோ)

wpengine