பிரதான செய்திகள்

14 பேரை காவுகொண்ட பதுளை – பசறை பேருந்து விபத்தில் கைதான சாரதி பிணையில் விடுதலை!

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி, பதுளை – பசறை 13ஆம் கட்டையில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் கைதான சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பசறை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (22) முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம், வழக்கு விசாரணை அடுத்த மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 14
பேர் மரணித்ததுடன், 32 பேர்
காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண் விரிவுரையாளர்!! JAFFNA NEWS TAMIL

Editor

நன்னீர் மீன்பிடியாளர்களது வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டுள்ளது-டெனிஸ்வரன்

wpengine

நானாட்டன் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்த விளையாட்டு கழகங்கள்

wpengine