பிரதான செய்திகள்

14 ஆயிரம் சமூர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம்

சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி நலன்பெறும் பயனாளிகள் கடந்த மூன்று வருடங்களுக்கு அதிகமாக முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பணிப்புரை விடுத்துள்ளதாக வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

 

அத்துடன் நாளை மறுதினம் 30 ஆம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் புதிதாக நியமனம் பெற்றுள்ள 14 ஆயிரம் சமூர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

ஹுனைசின் குற்றச்சாட்டு ஹக்கீமின் வில்பத்து பொடு போக்கை காட்டுகிறது

wpengine

அணியும் ஆடைகள் கூட இழந்த சந்தர்ப்பத்திலேயே ரணில் ஜனாதிபதியாக வந்தார்.

wpengine

மதம் , சமையம் சார்ந்த புத்தகங்கள் இறக்குமதிக்கு தடைகள் நீக்கம் .

Maash