செய்திகள்பிரதான செய்திகள்

13 கிலோ ஹெரோயின் மற்றும் 3 கிலோ 580 கிராம் ஐஸ் போதைப்பொருளும் ஒருவர் கைது .

கொட்டிகாவத்தை, நாகஹமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில்  13 கிலோ 372 கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிலோ 580 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன்  27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் மாலபே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 80 கோடி பெறுமதியானவையாகும் .

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டிகாவத்தை நாகஹமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்று போதைப்பொருள் விநியோக நிலையமாக இயங்கி வருவதாக மாலபே பொலிஸாருக்கு தகவல் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​மஹர பகுதியைச் சேர்ந்த மொரின் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் பெயர் வெளிவந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவை பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Related posts

மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி!

Editor

முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கான நோன்புகால சுற்றறிக்கை

wpengine

புலிகளின் பிரிவினைவாத கொள்கை இன்னும் இருக்கின்றது! 20வது திருத்தம் மீள்பரீசிலனை வேண்டும்

wpengine