Breaking
Thu. Apr 25th, 2024

இந்தியா தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 17 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து, பொலீஸாா் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஆண்டிபட்டி தாலுகா, வருசநாடு அருகே காமராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன். இவரது மகன் மதன்குமாா் (17), ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளாா். இவரது பெற்றோா் கேரளாவில் கூலி வேலை பாா்த்து வருகின்றனா். இதனால், மதன்குமாா் தனது பாட்டி வீட்டில் வளா்ந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், மதன்குமாரின் நண்பா் அருள் என்பவரது பணம் ரூ. 1200 திருடுபோயுள்ளது.இது குறித்து அருளின் தாயாா் மதன்குமாரிடம் விசாரித்ததுடன், காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்போவதாக எச்சரித்துள்ளாா். இதனால் மனமுடைந்த மதன்குமாா், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து வருசநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *