பிரதான செய்திகள்

12 மில்லியன் மின்சாரக் கட்டணம் நிலுவையில் உள்ள அமைச்சர்! வெள்ளவத்தையில் சண்டித்தனம்.

அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர் பெருந்தொகை மின் கட்டணத்தை செலுத்தவில்லை என தெரிய வந்துள்ளது.

வெள்ளவத்தை, சரணங்கர வீதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் பிரபல அமைச்சரவை அமைச்சரே இவ்வாறு செலுத்தவில்லை என தெரிய வருகிறது.

சுமார் 12 மில்லியன் ரூபாய் மின்சாரக் கட்டணம் நிலுவையில் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் வெளிப்படுத்தினார்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க சென்ற மின்சார சபை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைச்சர் செயற்பட்டுள்ளார்.

மின் மாணியை பரிசோதிக்க வந்த அதிகாரிகளை, அமைச்சர் தனது பாதுகாப்புப் படையினர் மூலம் அச்சுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Related posts

மீன் ஏற்றுமதி தடை! ஐரோப்பிய ஒன்றியத்தி்னால் நீக்கம்

wpengine

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் கட்சி பொறுப்பல்ல

wpengine

தாஜூதின் படுகொலை செய்யப்பட்டமைக்கு அவர்கள் தூக்கு மேடைக்கு செல்வார்கள்.

wpengine