உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

114 வயது மாரத்தான் ‘ஜாம்பவான்’ பவுஜா சிங் சாலை விபத்தில் உயிரிழப்பு.

பஞ்சாபில் 114 வயது மாரத்தான் ‘ஜாம்பவான்’ பவுஜா சிங் சாலை விபத்தில், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த 114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங் ஜலந்தர்-பதான் கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பியாஸ் கிராமத்தில் தனது வீட்டிற்கு வெளியே நடந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர், படுகாயங்களுடன் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ‘தலைப்பாகை சூறாவளி’ என அழைக்கப்படும் பவுஜா சிங் மறைவு பல்வேறு தரப்பினரை சோகத்தில் ஆழ்த்தியது.

பவுஜா சிங் முழு சீக்கிய சமூகத்திற்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருந்தார்” என சீக்கிய சமூக மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Related posts

ரஷ்யா- உக்ரைன் ஐ.நா. தீர்மானம்! இலங்கை புறக்கணிப்பு

wpengine

உவைசியை கொல்வதற்காக துப்பாக்கிகளை வாங்கினேன் – ஹிந்து தீவிரவாதி வாக்குமூலம்

wpengine

மக்கா மண்ணில் எனக்கு அளிக்கப்பட்ட கவுரவத்தை கண்டு இங்குள்ள சிலருக்கு வயிற்றெரிச்சல் – மோடி

wpengine