செய்திகள்பிரதான செய்திகள்

11 இடங்களில் கத்திக்குத்து, பூசா சிறைச்சாலையில் கைதியொருவர் கொலை .

பூசா சிறைச்சாலையில் கைதியொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்தக் கொலையை சிறைத்தண்டனை கைதி ஒருவர் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

உயிரிழந்தவர் சிவா என்பவர் எனவும், அவரது உடலில் சுமார் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் காலி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Related posts

ஒரு கோடி 20இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி வைத்தியசாலைக்கு நவீன மருத்துவ உபகரணங்கள்

wpengine

ஜனாதிபதி ரணில் விரைவில் வெளிநாட்டு பயணம்! கடன் தொடர்பில்

wpengine

தமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்களின் பலர் இஸ்லாமியர்கள்

wpengine