பிரதான செய்திகள்

100 பௌத்த பிக்குகளின் தீவிர பாதுகாப்பில் மஹிந்த! அதிரடி அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதி செய்ய 100 பௌத்த பிக்குகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக பொதுமக்களையும் பௌத்த பிக்குகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 100 பௌத்த பிக்குகளும், ஆயிரம் பொதுமக்களும் இதில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.  ஒரு பௌத்த பிக்குவிற்கு 10 பொதுமக்கள் என்ற ரீதியில் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படும்.

இந்தப் பணியில் இணைந்து கொள்ள விரும்புவோர் தாமகவே முன்வந்து தங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்

wpengine

ஜப்பான் அரசாங்கம் மற்றும் (UNFPA ) ஆகியன இணைந்து வடக்கு சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன.

Maash

65 ஆயிரம் பொருத்து வீடுகளில் எந்த குறைப்பாடுகளும் இல்லை – சுவாமிநாதன்

wpengine