பிரதான செய்திகள்

ஹக்கீம் தன்னை குற்றமற்றவர் என நிரூபித்தாரா?

நேற்று கூடிய மு.காவின் உயர் பீடம் பஷீர் சேகு தாவூதை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருந்தது.இதனை வைத்து ஹக்கீம் தன்னை குற்றமற்றவராக நிரூபித்துள்ளார் என்ற வகையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

பஷீர் மீது ஒழுக்காற்று நடவடிக்க எடுப்பதாக இருந்தால் அவரை மு.கா பகிரங்க விசாரணைக்கு அழைத்து அழகிய முறையில் செய்திருக்க முடியும்.அவ்வாறு செய்து அவரை நீக்கி இருந்தால் அமைச்சர் ஹக்கீம் தன்னை குற்றமற்றவராக நிரூபித்தவராக எந்தவித சந்தேகமுமில்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

 

பஷீர் சேகு தாவூதை  அவர் இல்லாத சந்தர்ப்பத்தில் ஒழித்து நீக்கி இருக்க வேண்டிய அவசியமில்லை.மடியில் கனமில்லையென்றால் இம் முறைக்கு ஏன் அச்சம்? பஷீரை நீக்கியமை அமைச்சர் ஹக்கீமின் தைரியத்தை எடுத்துக் காட்டினாலும் தன்னை தூய்மையானவராக நிரூபிக்க போதுமானதல்ல.

 

பகிரங்க விசாரணை செய்யாமல் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்க எடுத்திருப்பது அமைச்சர் ஹக்கீம் ஏதோ ஒரு விடயத்திற்கு அஞ்சுகிறார் என்பதாகவே பொருள் கொள்ளலாம்.விசாரணை செய்யும் போது அமைச்சர் மீதான ஏதேனும் குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால்?

 

இப்படிக்கு

அபு ரஷாத் (அக்கரைப்பற்று)

 

Related posts

முசலி பிரதேச மீள்குடியேற்றத்திற்கு எதிரான கருத்தை முன்வைக்கும் உதவி அரசாங்க அதிபர்

wpengine

கொத்துக்கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்ட போது முஸ்லிம் அரசியல்வாதிகளை காணவில்லை மனோ ஆவேசம்

wpengine

இலங்கை அபிவிருத்தி வாய்ப்பை மேற்கொள்ள தயாராக உள்ள அதானி! தகவல் இல்லாத நிலையில் விலக முடிவு!

Maash