பிரதான செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முஸ்லிம் பிரிவின் ஒன்றுகூடல்! மஸ்தான்,ஹிஸ்புல்லாஹ் ,பௌசி

(அஷ்ரப். ஏ.சமத்)

ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவு  கூட்டம்  இன்று பிற்பகல் கொழும்பு ஸ்ரீ.ல.சு.கட்சித் தலைமையகத்தில் அதன் தலைவா் சிரேஷ்ட அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சா் எம்.எல்.ஏம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பிணா் எம். மஸ்தான், வடக்கு ஆளுனர் ரேஜிரேல்ட் குரே முன்னாள் அமைச்சா் அதாவுட செனவிரத்தின, நஜீப். ஏ மஜீத் மற்றும் மாகாண சபை உறுப்பிணா்கள் முன்னாள் ஸ்ரீ.ல.சு.கட்சி யின் முஸ்லில் உள்ளுராட்சி உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.

இங்கு உரையாற்றிய  வடக்கு ஆளுனர் ரேஜினோல் குரே

 

இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்கள்  பண்டாரநாயக்க காலத் தொட்டு ஸ்ரீ.ல.சு கட்சியை ஆதரித்துவந்தவா்கள்.   கடந்த 30 வருட கால யுத்த்தின்போதே நாம் தமிழ் கட்சி, முஸ்லீம் கட்சி பௌத்த கட்சி என பிரிந்து நிற்கின்றோம். அது மட்டுமல்ல நமது பாடசாலைகளைக் கூட  முஸ்லீம் பாடசாலை தமிழ் பாடசாலை பௌத்த பாடசாலை என பிரித்து வைத்துள்ளோம். அதற்காகவே நான் வவுனியாவில் மூவினங்களும் கல்வி கற்கக் கூடியதொரு பாடசாலையை அமைத்துள்ளோம்.

நாம் சகலரும் ஒரே கூறையின் கீழ் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையில் ஒன்றினைந்து இந்த கட்சியின் ஆட்சியில் சகலரும் சோ்ந்து கட்டியெழுப்ப வருமாறு வேண்டிக் கொண்டாா். இந்த நாட்டுக்கு முஸ்லீம்கள் வரும்போது ஒரு போதும் பெண்களை அழைத்து வரவில்லை இங்குள்ள சிஙகள பெண்களையே மணமுடித்தாா்கள். அதே போன்று தான் சிங்களவா்களும் இந்தியாவில் இருந்து தான் இங்கு வந்தாா்கள்  ஆகவே சிங்கலே என்னும் இரத்தம்  இந்த நாட்டில்  இல்லை. சகல இரத்தமும் ஒன்றட கலந்துவைதான்.

இங்கு உரையாற்றி இராஜாங்க அமைச்சா் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

ஓக்டோபா் 2ஆம் திகதியுடன் உள்ளுராட்சி தோ்தல்  வட்டார முறை தோ்தல் பாராளுமன்றத்தில் வாக்கெடுத்து அதன் பின்னா் அமுலுக்கு வரும்.  அதே போன்று தான்  பிரதம மந்திரி  9 மாகாணசபைகளையும் ஒன்றரை வருடத்திற்கு பிற்படுத்தி   ஒரு நாளில் தோ்தலை நடாத்த திட்டமிட்டிருந்தாா். அதனை ஸ்ரீ.ல.சு கட்சி எதிா்த்தது.  எதிா்வரும்  ஒக்டோபரில்  2ஆம் திகதியுடன் முடிவடையுடன் கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய இரண்டு மாகாணசபைகளுக்கான   பதவிக்காலம் முடிவடைந்ததும் அதனை தோ்தல் ஆணையாளருக்கு அறிவித்து    அடுத்த மாதமே தோ்தல்  நடாத்தப்படல் வேண்டும். இதனையே  ஸ்ரீ.ல.சு.கட்சி   பிரதமருக்கு அறிவித்து பிரேரனையும் நிறைவேற்றியது.  ஆகவே நாம்  உள்ளுராட்சித் தோ்தலில் வட்டார முறைமையினால்    சிங்கள மக்களோடு கலந்து வாழும் பெரும்பாண்மையான உறுப்பிணா் இல்லாமல் போகிவிட சா்ந்தா்ப்பங்கள் உள்ளன. இங்கு வருகை தந்துள்ள முன்னாள் உள்ளுராட்சி உறுப்பிணா்கள் அடுத்த முறை அந்த உறுப்பிணா் இல்லாமல் போகிவிடலாம். நாம் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றால் ஒன்று இரண்டு போனஸ் ஆசனம் கிடைக்கும் அதுவும்  வாக்குகள் அடிப்படையில் அடுத்த உள்ளவருக்கு தான் அந்த போனஸ் ஆசனம் கிடைக்கும்.
 நாமும்  மஹிந்த அணி சி.ல.சு. அணி என பிரிந்திருந்தேமாயானால் நமக்கு  ஒரு ஆசனமும் இல்லாமல் போகிவிடும் . எதிா்வரும் உள்ளுராட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கு  நமது உறுப்பிணா்கள்  போட்டியிடுவதற்கு  அமைச்சா் பௌசி ஊடாக  கலந்து ஆலோசித்து  செயற்படல்  வேண்டும். கிழக்கு மாகாணசபையைக் கூட கடந்த இருமுறை ஸ்ரீ.ல.சு கட்சியை முதலமைச்சராகவும் இருந்து வந்தது. ஆனால் தற்போது நாம் எதிா்கட்சியில் ஆசனத்தில் இருக்கின்றோம். எதிா்காலத்தில் நாம் அவ்வாறு இல்லாமல் மீண்டும் கிழக்கு மாகணசபை ஸ்ரீ.ல.சு.கட்சியில் ஆட்சியில் அமரல்வேண்டும். அதற்காகவும் நாம் கட்சிரீதியாக ஒன்றுபட்டு உழைத்தல் வேண்டும்.

Related posts

மன்னார் மாவட்ட புதிய மறை மாவட்ட ஆயர் நியமனம்

wpengine

பிரதமர் மோடியின் கல்வி தகுதி என்ன? கெஜ்ரிவால் அதிரடி கேள்வி

wpengine

South-East University’s Oluvil – Colombo Academic and practical programme new building opened today at Mount Lavniya

wpengine