தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களை தாக்கும் புதிய நோய்

ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துபவர்கள் டிஜிட்டல் அம்னீசியா என்னும் நோயால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது உள்ள காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போனுக்கு அடிமையே என சொன்னால் அது மிகையாகாது.

குறிப்பாக இளைஞர்கள் அதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், அவர்கள் அதிகம் டிஜிட்டல் அம்னீசியா என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு பின்னர், அனைவரும் சிறு நினைவூட்டலுக்கு கூட மூளைக்கு பதிலாக, ஸ்மார்ட்போன்களையே நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், மூளையில் பதிய வைக்கும் திறன் குறைந்து, நாளடைவில் படிப்படியாக முக்கியமானவர்கள் தொடர்பு எண் முதற்கொண்டு வீட்டு முகவரி வரை அனைத்தையும் மறக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையே டிஜிட்டல் அம்னீசியா எனப்படுகின்றது, எனவே இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஸ்மார்ட் போன்களின் உபயோகத்தை குறைத்து முக்கியமான விடயங்களை மூளையில் பதிய வைப்பதுடன், முக்கிய குறிப்புகளில் எழுதி வைத்து நமது மூளை செயல்பாட்டை திறனை அதிகரிக்கச் செய்வதே நன்று என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக பாரிய கையெழுத்து வேட்டை

wpengine

மன்னாரில் காதல் விவகாரம்! தற்கொலை செய்த மாணவன்

wpengine

மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்று அறிகுறிகளுடன் இருவர்

wpengine