பிரதான செய்திகள்

ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் வேண்டுகோலுக்கு ஏற்ப சாய்ந்தமருதுக்கு அரசகரும மொழிகள் ஆய்வுகூடம்.

(Ashraff. A. Samad)

சாய்ந்தமருதுக்கு அரசகரும மொழிகள் ஆய்வுகூடம் ஒன்றை அமைப்பதற்கு ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பு விடுத்த வேண்டுகோளுக்கு, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

மிக விரைவில் அரசகரும மொழிகள் ஆய்வுகூடத்தை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பின் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் இதற்கான வேண்டுகோள் கடித்தை அமைச்சரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் அமைப்பின் பிரதி தலைவர் சியாம் ஆப்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

எல்பிட்டிய தேர்தலில் மக்கள் வழங்கிய முடிவு ஜனாதிபதி தேர்தலிலும் கிடைக்கும்

wpengine

இலங்கையில் போக்குவரத்து,உணவு பணவீக்கம் பல மடங்கு அதிகரிப்பு

wpengine

அமெரிக்கா தூதுவரை திருப்பியழைக்க நடவடிக்கை

wpengine