பிரதான செய்திகள்

வேட்புமனு தாக்கல்! மஹிந்த மட்டுமே தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுத்தருவார்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சாவகச்சேரி உள்ளூராட்சி தொகுதியில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

இன்றைய தினம் மாலை 3 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் திணைக்கள மாவட்ட அலுவலகத்தில் கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளது.

ஈ.பி.டீ.பி கட்சியிலிருந்து விலகிய தம்பிதுரை ரஜீவ் தலைமையிலான குழு இந்த வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த தம்பித்துரை ரஜீவ்,
மகிந்த ராஜபக்ஸவினால் மட்டுமே தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க இயலும். இந்த ஆட்சியாலும் வேறு யாராலும் கூட அது இயலாத விடயம்.

அதேபோல் அபிவிருத்தியும் கூட மகிந்த ராஜபக்ஸவினாலேயே முடியும். நாங்கள்வெற்றி பெற்றால் சாவகச்சேரி நகரை அபிவிருத்தி செய்வோம் என்றார்.

Related posts

மகிந்த ராஜபக்ச போன்றவர்கள் காண்கின்ற கனவுக்கு சாவு மணியடிக்க வேண்டும் அமீர் அலி

wpengine

இ்ணைய குற்றங்களை கட்டுபடுத்த தனியான காவற்துறை பிரிவு

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் எரிபொருள் கொடுப்பனவை நிராகரித்த சுமார் 20 அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும்.

Maash