வவுனியா சிறைச்சாலையில் இருந்து வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
நாடளாவிய ரீதியில் 388 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வெசாக் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (12) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையிலும் சிறு குற்றங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் பி. டபிள்யு.எச். மதுசங்க தலைமையில் கைதிகள் விடுவிப்பு இடம்பெற்றிருந்தது.