வெசாக் போயா தினமான நாளை (12) மற்றும் நாளை மறுநாள் (13) ஆகிய தினங்கள் சிறைச்சாலை கைதிகளை பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கைதிகளின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவுப் பொதிகள், இனிப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவிக்கிறது.
இந்த பார்வையாளர்கள் சந்திப்பு நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய இடம்பெறவுள்ளன.