பிரதான செய்திகள்

வீதிப் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் விழிப்புணர்வு

வீதிப் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று நடைபெற்றுள்ளது.


மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெசிந்தன் தலைமையில் இந்த நடைபவனி ஆரம்பமாகியுள்ளது.

மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள் பணியாளர்கள் உட்பட திணைக்கள பணியாளர்களும் குறித்த விழிப்புணர்வு நடை பவனியில் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான வடக்கு மாகாண வீதி பாதுகாப்பு வாரமானது எதிர்வரும் 13ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

wpengine

வடமாகாண ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்திசெய்யப்படும் – ரவீந்திரன்

wpengine

முடியாவிட்டால் எஸ்.பி. திஸாநாயக்க அரசியலை விட்டு வெளியேற வேண்டும் முன்னால் அமைச்சர் கோரிக்கை

wpengine