பிரதான செய்திகள்

விசேட இராப்போசன விருந்து! சம்பந்தன்,விக்னேஸ்வரன் பங்கேற்பு முஸ்லிம் தலைவர்கள் எங்கே?

சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு (11) விசேட இராப்போசன விருந்து ஒன்று கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய பிரதமர் அவர்களை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இதில் முஸ்லிம்களின் தலைவர்கள் என்று சொல்லி தெரியும் எந்த கட்சி அரசியல்வாதிகளே! கலந்துகொள்ள வில்லை என்பது குறிப்பிடதக்கது.

Related posts

தற்போது அந்த வாக்குறுதி ஜனாதிபதிக்கு மறந்து போயுள்ளது.

wpengine

50 ஆண்டுகளாக காணி உறுதிப்பத்திரம் தராமல் இழுத்தடிக்கப்படுகின்றதென வவுனியா மக்கள் றிசாத்திடம் அங்கலாய்ப்பு.

wpengine

மன்னாரில் மூன்றாவது முறை உடைக்கப்பட்ட பிள்ளையார்!இந்துக்கள் விசனம்

wpengine