உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

விசாரணைக்கு ஆஜராகவில்லை! முஷாரப்பின் சொத்துக்கள் பறிமுதல்.

பாகிஸ்தானில் மதகுரு கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் மாஜி அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.முஷாரப் அதிபராக இருந்தபோது 2007ம் ஆண்டு லால் மசூதிக்குள் ராணுவம் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடியது. இந்த மோதலில் மதகுரு அப்துல் ரஷீத் காஜி கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு முஷாரப் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இவ்வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முஷாரப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நிராகரித்தார். அத்துடன், விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

Related posts

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம்

wpengine

றிஷாட், மரைக்கார் மீது போலி குற்றச்சாட்டுகளை பரப்பும் இனவாதிகள்

wpengine

மகளிர் தினத்தையொட்டி விதவைகளுக்கு இலவச ஹெலிகாப்டர் பயணம்

wpengine