பிரதான செய்திகள்

விக்னேஸ்வரனின் நோக்கத்திற்கு நாங்கள் தலைசாய்க்க முடியாது- ஹிஸ்புல்லாஹ்

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தனது என்னத்தில் தோன்றும் விடயங்களை அறிக்கையாக மாகாணசபையில் சமர்பித்து நிறைவேற்றுவதாகவும் இதற்கு நாங்கள் தலை சாய்க்க தேவையில்லை எனவும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வடக்கினையும் கிழக்கினையும் ஒன்றிணைக்கின்றார். இதற்கு நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

நாங்கள் தனித்தே செயற்படுவோம். குறித்த மாகாணத்திற்கு பொறுப்பானவர்கள்தான் அந்த மாகாணத்திற்கு உரிய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

இப்போது அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள்.

மக்களின் அபிலாசைகளை எப்போதும் வெல்ல முடியாது. இதனால் நாம் எப்போதும் தனித்துதான் செயற்படுவோம் என்றும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

உதயன் நாளிதழ் நடாத்திய சித்திரைப் புதுவருட விழா-2017 (படங்கள்)

wpengine

கத்திகள், கைப் பிடிகளையே கனரக ஆயுதமாகவும் சமையலறைகளை பயிற்சி முகாம்களாகவும் காட்டும் ஊடக மேலாண்மைவாதிகள்

wpengine

ஜனாதிபதி தேர்தலில் மோசடி; ரஷ்யா மீது விசாரணை செய்ய ஒபாமா உத்தரவு

wpengine