பிரதான செய்திகள்

விக்னேஸ்வரனின் “எழுக தமிழ்“ நல்லிணக்கத்திற்கு எதிரான-எம். ஏ.சுமந்திரன்

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுக தமிழ் பேரெழுச்சியில் தெரிவித்திருக்கும் கருத்து நாட்டின் நல்லிணக்கத்திற்கு எதிரானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடைபெற்றிருந்தது.

குறித்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவையும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கண்டனங்களையும் வெளியிட்டிருந்தனர்.

பேரணியின் இறுதியில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சுமந்திரன்,

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, நாம் அதில் கலந்துகொள்ள வில்லை.

இன்றைய தினம் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எதிரானது.

நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தெற்கு மக்களுக்கு தவறான ஒரு கருத்தை கொடுப்பதாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முசலி முஸ்லிம் விளையாட்டு கழகங்களை ஊக்குவிக்காத பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர்! வீரர்கள் கண்டனம்

wpengine

இணக்க அரசியல் இதற்கு தானா?

wpengine

Google transit செயலியை அறிமுகப்படுததும் அடிப்படை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

wpengine