பிரதான செய்திகள்

வாழைச்சேனை முஸ்லிம் ஒருவரின் முச்சக்கரவண்டி தீக்கரை

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி 3ஆம் வட்டாரத்தில் குடும்பஸ்தர் ஒருவரது முச்சக்கரவண்டி, இன்று அதிகாலை   இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

புனித நோன்பு காலம் என்பதால் சஹர் செய்வதற்காக குறித்த குடும்பஸ்தர் இன்று காலை 2.45 மணியளவில் நித்திரையிலிருந்து எழும்பியுள்ளார்.

இதன்போதே முச்சக்கர வண்டி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும்  இதுவரை சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

Related posts

ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு பல கவச வாகனங்கள், பீரங்கிகளை வழங்கிய நேட்டோ!

Editor

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

Maash

ரணில் விக்ரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் விஷேட உரை

wpengine