பிரதான செய்திகள்

வாழைச்சேனை கறுவாக்கேணியில் மின் ஒழுக்கால் வீடு தீப்பிடிப்பு

(அனா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கறுவாக்கேணி பகுதியில் வீடொன்று மின் ஒழுக்கு காரணமாக சனிக்கிழமை காலை தீப்பிடித்து எரிந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கறுவாக்கேணி சண்முகலிங்கம் வீதியில் வசிக்கும் சுப்பிரமணியம் திருமஞ்சனா என்பவரின் வீடே இவ்வாறு தீப்பிடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தார்.

மின் ஒழுக்கு ஏற்படும் போது வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்தமையால் இதனை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டு சுமூக நிலைக்கு கொண்டு வந்ததுடன், அவரும் தீயில் காயமடைந்து வாழைச்சேனை ஆதா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பியுள்ளார்.

இத்தீ விபத்து காரணமாக வீட்டின் சில மின்சார பொருட்கள், றப்பர் பொருட்கள் என்பன சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வலய கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆசிரியர் ஒருவர் உண்ணாவிரதம்.

wpengine

மத நல்லிணக்கம் ஏன் இன்று அவசியம்? ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்.

wpengine

சாவற்கட்டு மற்றும் சின்னக்கடை கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு மன்னார் பிரதேச செயலாளரின் அவசரச் செய்தி

wpengine