பிரதான செய்திகள்

வாழைச்சேனையில் போதைவஷ்தை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

(அனா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிகரித்து காணப்படும் போதைவஷ்து பாவனையை கட்டுப்படுத்தக் கோறி வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை மக்கள் நேற்று (19.08.2016) ஜூம்ஆ தொழுகையின் பின்னர் அமைதியான ஊர்வலம் ஒன்றினை மேற்கொண்டனர்.

பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் கே.பதுர்தீன் தலைமையில் இடம் பெற்ற இவ் அமைதி ஊர்வலம் பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்ஆ பள்ளிவாயலில் இருந்து ஆரம்பமாகி பன்சல வீதி, மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியூடாக வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தை சென்றடைந்தது.unnamed (3)

அமைதி ஊர்வலத்தின் இறுதியில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் குறைவடைந்து காணப்பட்ட போதைவஸ்து பாவனை தற்போது அதிகரித்து காணப்படுவதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸில் தனிப்பிரிவென்றை அமைக்குமாரும் கோறி வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர விதாககேயிடம் பள்ளிவாயல் தலைவர் கே.பதுர்தீன் மகஜர் ஒன்றினை கையளித்தார் இதில் பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.unnamed (1)

unnamed (4)

Related posts

ஜனாதிபதி ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை

wpengine

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 15 பஸ்கள் உட்பட, 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்.

Maash

இந்தப்பிரதேசத்து மாணவர்களின் கல்வியை உயர்வடையச்செய்ய வேண்டும் -அமீர் அலி

wpengine