பிரதான செய்திகள்

வாழைச்சேனையில் திருட்டு சம்பவம்! தொடர்புடையோர் கைது

(அனா)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த மூன்று மாதங்களாக திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிஸாரால் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கடந்த (12.02.2017) கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மீள் குடியேற்ற கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களாக திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுவந்த நிலையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர்களான விமலரத்ன, ரீ.மேனன், பொலிஸ் உத்தியோகத்தரான ஏ.எல்._னைட் ஆகியோர் அடங்கிய குழுவினர் சந்தேக நபரை கடந்த (12.02.2017) கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து நீர் இறைக்கும் இயந்திரம் பத்து (10) நீர் குழாய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டமுன தெரிவித்தார்.

Related posts

வவுனியாவில் 21 வயது இளைஞரின் சடலம் மீட்பு!

Editor

வடக்கில் தேசிய கொடியை இறக்கிவிட்டு, கறுப்புக்கொடி என்பது தெற்கு மக்களின் உணர்வை தூண்டுவதாகும்.

Maash

மினி சூறாவளியால் பொலிவேரியன் சிட்டியில் 51 வீடுகள் சேதம்; 214 பேர் பாதிப்பு

wpengine