பிரதான செய்திகள்

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை மேலும் நீடிப்பு!

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் கடந்த 16 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், சில பகுதிகளில் உரிய முறையில் வாக்காளர் இடாப்பு திருத்தம் உரிய முறையில் இடம்பெறவில்லை என தகவல் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

இதேவேளை, நாட்டின் பொருளாதார நிலைமை சிறந்த நிலையை அடைந்ததன் பின்னர் மீண்டும் தேர்தலுக்கான நிதியை திறைசேரியிடமிருந்து கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கவனயீரப்பு போராட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது.

wpengine

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்

wpengine

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு!

wpengine