இலங்கையின் புதிய வாகனப் பதிவுச் செயற்பாடு இலக்கத் தகடுகளின் பற்றாக்குறையால் தாமதத்தை எதிர்நோக்குவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) உறுதிப்படுத்தியுள்ளது.
புதிய வாகன உரிமையாளர்களுக்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அனுப்பியுள்ள கடிதத்தில், தட்டுப்பாடு காரணமாக, நம்பர் பிளேட்கள் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்காலத் தீர்வாக, வாகன எண் அடங்கிய கடிதத்துடன், பதிவு செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தும் கடிதத்துடன் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு திணைக்களம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தற்காலிக நடவடிக்கை ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் அமுலுக்கு வருவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.