பிரதான செய்திகள்

வாகனம் கொள்வனவு செய்ய அமைச்சர்களுக்கு தடை

அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கு வாடகை அடிப்படையிலான கட்டடங்கள் மற்றும் வாகனங்களை பெற்றுக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.


செலவுகளை குறைக்கும் வகையில் செயற்படுமாறு சகல அமைச்சர்களுக்கும், ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது தனியார் கட்டடங்களில் நடத்தி செல்லப்படுகின்ற அரச நிறுவனங்களை முடிந்தளவு அரசாங்க கட்டடங்களுக்கு கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதனை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.


செலவுகளை குறைப்பதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் மீது தாக்குதல்

wpengine

மதுபானசாலையை அகற்றுவதற்கு வவுனியா நகரசபையில் ஏகமனதாக தீர்மானம்.

wpengine

இராணுவத்தை அரசாங்கத்துக்கு நம்பிக்கையாக மாற்றுவதற்கும் தான் பணியாற்றுகின்றேன். ” ஜனாதிபதி “

Maash