பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட விருந்தினர் விடுதியொன்றி சடலம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியொன்றிலிருந்து இன்று மாலை 3 மணியளவில் இளைஞனொருவனின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். 

 

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியொன்றில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய அந்தோனி நிக்சன் என்ற இளைஞனின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

இவரின் சடலத்திற்கு அருகே நஞ்சருந்தி தற்கொலை செய்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா தடவியல் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அரேபிய அரசாங்கம், மக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசாக்களை தற்காலிகமாக நிறுத்தி

wpengine

மாதல்கந்த புண்ணியசார தேரிடம் அமைச்சர் றிஷாட் சமூகங்களுக்கு இடையில் புரிந்துணர்வும் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.

wpengine

புதிய அமைச்சரவை! தற்போதைய நெருக்கடி நிலைமை மோசமடையும் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க

wpengine