பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட செயலகத்தில் முற்றுகை

வவுனியா மாவட்ட செயலகத்தில் வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை முதல் மாலை வரை அலுவலகத்தை பொதுமக்கள் நீண்ட நேரமாக முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச்சபையினால், வவுனியா மாவட்ட அலுவலகத்தில் வாழ்வாதார உதவிகள் பெற்றுக்கொள்வதற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வவுனியாவின் பல கிராமங்களிலிருந்தும் இன்று காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தமக்கான வாழ்வாதர உதவிகளைப் பெற்றுக்கொள்ள ஆவணங்கள் அலுவலகரினால் பரிசோதனைக்குட்டுபடுத்தப்பட்டு உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் நீண்ட நேரமாக அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மன்னார் மாவட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முக தேர்வின் முடிவுகள்

wpengine

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது இணையத்தளத்தில்!

wpengine

இஸ்லாமிய இயக்கங்களின் தடைகளுக்கு அழுத்தம் வழங்கியது யார் ? அரசின் கைக்கூலிகளான CTJ யை ஏன் தடைசெய்ய வேண்டும் ?

wpengine