பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதல்

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முச்சக்கரவண்டி வண்டி ஏ9 வீதியூடாக மாங்குளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது புளியங்குளம் பகுதியில் வீதியின் குறுக்காக மாடு புகுந்ததில் முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மாட்டுடன் மோதுண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மட்டக்களப்பில் அவ்வாறான இணைவுக்கு SLMC தான் தடையாக இருந்தது.

wpengine

தூக்கில் தொங்கிய வவுனியா பாடசாலை மாணவி

wpengine

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உதவி செய்யுங்கள்

wpengine