பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதல்

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முச்சக்கரவண்டி வண்டி ஏ9 வீதியூடாக மாங்குளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது புளியங்குளம் பகுதியில் வீதியின் குறுக்காக மாடு புகுந்ததில் முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மாட்டுடன் மோதுண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

விடுதலை செய்யுமாறு கோரி மன்னார் மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

wpengine

சொத்து அறிக்கைகளை சமர்ப்பிக்காத எம்.பி.க்கள் மீது சட்ட நடவடிக்கை..!

Maash

நாடுபூராவும் 43,273 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன என அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Maash