பிரதான செய்திகள்

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 17.6 அடியாக உயரம்

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டமானது 17.6 அடியாக உயர்வடைந்துள்ளது.

தொடர்ந்தும் மழை பெய்தால் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர் எ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான பாவற்குளத்தின் நீர் கொள்ளளவு திறன் 19.4 அடியாகும். தற்போது பெய்து வரும் மழை காரணமாக 17.6 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

தொடர்ந்தும் மழை பெய்தால் அதன் வான் கதவுகள் திறக்கப்படும். 18 அடியை அண்மித்த வருவதால் பாவற்குளத்தின் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மெனிக்பாம், மீடியாபாம், பாவற்குளம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட அரச அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

 “வடக்கு மக்களின் உணர்ச்சிகளுடன் மோசமான அரசியல் விளையாடுவதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

Maash

பாலித தெவரப்பெரும தற்கொலை முயற்சி

wpengine

நாட்டுக்காக உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் 152 வது பொலிஸ் வீரர்கள் தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

wpengine